மீன் சந்தையில் வழிப்பறி இருவர் கைது

புளியந்தோப்பு, :மீன் சந்தைக்கு வருவோரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

புளியந்தோப்பு, பட்டாளம், மீன் சந்தை பகுதியில், இரண்டு வாலிபர்கள் அங்கு வருவோரை மிரட்டி பணம் பறிப்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், புளியந்தோப்பு, கனகராய தோட்டத்தைச் சேர்ந்த சதீஷ், 27, மற்றும் கிரிதரன், 19, என தெரிந்தது. இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement