வீடு புகுந்து போன் திருடிய சிறுவன் கைது
சென்னை:வீட்டிற்குள் புகுந்து, இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 20,000 ரூபாய் திருடிய, 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் சரிதா, 43. இவர், கடந்த 23ம் தேதி வீட்டை திறந்து வைத்து சமையல் அறையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 20,000 ரூபாயை திருடி தப்பினார். இதுகுறித்து சரிதா, திருவல்லிக்கேணி காவல் நிலையம் குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, 15 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், இவர் ஏற்கனவே, கண்ணகி நகரில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, ஆப்பிள் ஐ பேடு மற்றும் இரண்டு மொபைல் போன்களை திருடியதும் தெரியவந்தது. கைதான சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும்
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்
-
தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!