வீடு புகுந்து போன் திருடிய சிறுவன் கைது

சென்னை:வீட்டிற்குள் புகுந்து, இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 20,000 ரூபாய் திருடிய, 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் சரிதா, 43. இவர், கடந்த 23ம் தேதி வீட்டை திறந்து வைத்து சமையல் அறையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 20,000 ரூபாயை திருடி தப்பினார். இதுகுறித்து சரிதா, திருவல்லிக்கேணி காவல் நிலையம் குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, 15 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், இவர் ஏற்கனவே, கண்ணகி நகரில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, ஆப்பிள் ஐ பேடு மற்றும் இரண்டு மொபைல் போன்களை திருடியதும் தெரியவந்தது. கைதான சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement