அரசு மருத்துவமனையில் லஞ்சம் வீடியோ வைரல்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினரிடம், தற்காலிக பெண் பணியாளர் லஞ்சம் கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணின் உறவினரிடம், சுகாதார தூய்மை பெண் பணியாளர் ஒருவர், 1500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பெண் பணியாளர் கூறியதாவது:
நாங்க வாங்குற 15,000 ரூபாய் சம்பளத்துக்கு கூலி வேலைக்கு போனா கூட யாருக்கும் கை கட்டி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ரத்தக்கரை படிந்த துணிகளை துவைப்பதற்குள் மயக்கமே வந்து விடுகிறது. அரசு ஒரு பொருளை கொடுத்தால் இன்னொரு பொருளை கொடுக்காது.
இங்கு இருப்பவர்கள் பெருக்கி, துடைப்பவர்களை பிடித்து உயிரை வாங்குகிறார்கள். ஒரு தொகையை பில் போட்டு எடுத்து கொண்டு, ஜாலியாக இருக்கின்றனர். அவர்களை கேள்வி கேட்க முடியுமா?
இவ்வாறு அதில் அவர் பேசி உள்ளார்.
மேலும்
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு