எருது விடும் விழா




கிருஷ்ணகிரி, ஜூன் 30
கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி கிராமத்தில், நேற்று எருது விடும் திருவிழா நடந்தது. இதில், மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும், 300க்கும் மேற்-பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்-தனர்.
இதில் குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும், முதல் ஐந்து காளைகளின் உரிமையாளர்களுக்கு டூவீலர்களும் மற்ற, 45 காளைகளின் உரிமையாளர்களுக்கு, 40,000 ரூபாய் வரை ரொக்கப்பரிசும், ஏர் கூலர், மின்விசிறி போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவை காண, 5,000க்கும் மேற்பட்ட இளை-ஞர்கள்
வந்திருந்தனர்.

Advertisement