தமிழகத்தின் பிணி தான் தி.மு.க., பா.ஜ., துணைத்தலைவர் பேச்சு

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு, மனதின் குரல் நிழ்ச்சியை கேட்டனர். தொடர்ந்து ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:


தி.மு.க., ஓரணி இல்லை; இந்த நாட்டின் பிணி. தி.மு.க., ஆட்சியை அகற்ற, அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். தற்போது, தமிழகத்தில் எண்ணற்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை நிலவி வருகிறது. ஜனநாயக காவலராக பிரதமர் இருப்பதால் தான், தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்கிறது. இல்லையென்றால் தி.மு.க., ஆட்சியை அகற்ற ஆயிரம் காரணங்கள் உள்ளன. தேர்தல் வரும்போது சேலை கட்டிய அனைவருக்கும், 1,000 ரூபாய் எனக்கூட அறிவிப்பார்கள். ராமதாஸ், குடும்ப பிரச்னைக்காக, தி.மு.க.,வை ஆதரிப்பார் எனக்கூற முடியாது. தற்போதைய பிரச்னையில், தி.மு.க.,வின் தலையீடு இல்லை என கூறி இருக்கிறாரே தவிர, நான் தி.மு.க.,வை ஆதரிப்பேன் என அவர் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement