சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட கலியனுார் பஞ்சாயத்தில், ஆவத்திபாளையம் பகுதியில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடத்திற்கு மிகவும் குறைந்த கட்டணம் என்பதால், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த சமுதாய கூடத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இந்த சமுதாய கூடம், இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
தற்போது, பராமரிப்பு இல்லாததால், சமுதாய கூடம் சேதமடைந்து, கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது. எனவே, கலியனுார் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த சமுதாய கூடத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement