கூட்டணி ஆட்சி வந்தால் வளர்ச்சி பாதிக்கும்: கொ.ம.தே.க.,

நாமக்கல்: கொ.ம.தே.க., ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் மணி, துரை, மாவட்ட நிர்வாகி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறியாதவது:
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர்பாக, பா.ஜ., பேசுவது பார்த்தால், அ.தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டதாக நாங்கள் சந்தேகிக்றோம். தமிழகத்தில், கூட்டணி ஆட்சி வந்தால் வளர்ச்சி பாதிக்கும். நிலையான ஆட்சி தான் வேண்டும். கிராமம் கிராமமாக சென்று பணியாற்ற வேண்டும். மக்களிடம் பேசுங்கள். வரும், சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சி வெற்றிப்பெற பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement