கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறுகிறதா பவானி: குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்

திருப்பூர்: கொங்கு மண்டலத்தின் ஜீவநதியாக விளங்கும் பவானி ஆற்றுநீர் மாசடைந்து, கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறி வருகிறது என்ற புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், பவானி ஆற்றில் சங்கமிக்கிறது.
இந்த நீரை ஆதாரமாக கொண்டு, மேட்டுப்பாளையம் முதல் பவானி கூடுதுறை வரை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 16 கூட்டு குடிநீர் திட்டங்கள், 46 தனி குடிநீர் திட்டங்கள் வாயிலாக தினசரி 30 கோடி லிட்டர் நீர், பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்த நீரை ஆதாரமாக கொண்டே காளிங்கராயன் அணை, கொடிவேரி அணை மற்றும் கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட 3 லட்சம் ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், கொங்கு மண்டலத்தின் ஜீவநதியாக விளங்கும் பவானி ஆற்றுநீர் மாசடைந்து, கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறி வருகிறது என்றபுகார் எழுந்துள்ளது.
கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி நகராட்சிகள், 12 பேரூராட்சி மற்றும் 44 ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகர, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக பவானி ஆற்றில் கலக்கிறது.
ஆறு. பாசன கால்வாய் கரையோரங்களில் குப்பை உள்ளிட்ட திடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், நன்னீர் வழிந்தோடி வரும் இந்த ஜீவநதி, கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறி வருகிறது.
உள்ளாட்சி நிர்வாகங்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து, வெளியேற்ற வேண்டும்.
தொழிற்சாலைகள், உற்பத்தி கூடங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, நீர்நிலை, ஆறுகள் மற்றும் வாய்க்காலில் கலக்க விடுவது, போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்துசெய்யவும் சட்டத்தில் அனுமதியுண்டு.
இதுபோன்ற சட்ட விதிகளை புறந்தள்ளி, பவானி ஆற்றில் தொடர்ந்து திட, திரவ கழிவுகள் கொட்டப்படுகின்றன; களைச்செடிகள் மற்றும் ஆகாயத்தாமரை பல இடங்களில் படர்ந்துள்ளன.
மாநில அரசு, உரிய கவனம் செலுத்தி பவானி நீர் மாசுபடுவதை தவிர்க்க, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக விளங்கி, இன்று பாழ்பட்டு கிடக்கும் நொய்யல் நதி போன்று, பவானி ஆற்றின் நிலையும் மாறும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.





மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்