போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகேயுள்ள சம்பை உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சம்பை உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளுக்கு தலைமையாசிரியர் ரத்தினவேலு தலைமை வகித்தார். விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டியில் மாணவர்கள் மாகித்கண்ணன், பரமேஸ்வரன், முகிலன், சதிகஷா, ஆகியோரும், பேச்சு போட்டியில் கிருத்திகா, குழு நாடகத்தில் மெருன் ஹவுஸ்சும், உடல், உள்ளம் சார்ந்த குழு விளையாட்டுகளில் பிங்க் ஹவுஸ்சும் வெற்றி பெற்றனர்.
தேவிபட்டினம் எஸ்.எஸ்.ஐ., பாலமுருகன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement