விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராஜபாளையம் : ராஜபாளையம் சட்ட பணிகள் குழு, எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரி இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தினம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரியில் நடந்தது.

முதல்வர் லட்சுமி வரவேற்றார். ராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சண்முகவேல் ராஜ் தலைமை வகித்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமநாதன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரீத்தி பிரசன்னா, டி.எஸ்.பி., பஸினா பீவி உள்ளிட்டோர் பேசினர். பேராசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.

Advertisement