ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் முதல் நடை மேடைக்கு மாறுமா

ராஜபாளையம் : ராஜபாளையம் ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக மூன்றாவது பிளாட்பார்மில் அமைந்துள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை முதல் பிளாட்பார்மில் மாற்ற வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர்.

ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே உள்ள நுழைவு பாதைக்கு மாற்றாக வடக்கு பகுதியில் அகலமான நுழைவாயில் வாகன நிறுத்தம் பழைய நடைமேடையில் லிப்ட் பணிகள் முடிந்துள்ளது.

புதிய 20 அடி அகல நடைமேடை மேம்பாலம் கட்டுமான பணி தொடங்க உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் தற்போது முதல் இரண்டு பிளாட்பார்ம்களில் மட்டும் 95 சதவித ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளான திருட்டு, ஆட்கள் பொருட்களை தவற விடுதல், விபத்துக்கள் குறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட வேண்டும். ஆனால் மூன்றாவது பிளாட்பார்மில் உள்ள பழைய கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பது பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை.

இதனால் புகார்கள் விடுபடுகின்றன. போலீசாரும் ஒவ்வொரு முறையும் நடைமேடை ஏறி இறங்கி ஸ்டேஷன்களுக்கு செல்வதில் சிரமம் எழுந்துள்ளது. தற்போது அம்ரித் பாரத் திட்டத்தில் ஸ்டேஷன் மேம்பாட்டிற்கான கட்டிட பணி நடந்து வரும் நிலையில் பயணியர் சுலபமாக தொடர்பு கொள்வதற்காக முதல் பிளாட்பார்மில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement