கண்மாய் துார்வார ரூ.83 லட்சம்

மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட ஆண்டிகுளம் கண்மாய் நீண்ட வருடங்களாக துார்வாரப்படாமல் இருந்தது. தற்போது கழிவுநீர் தேங்குவதால் அதனை சுத்தம் செய்து கண்மாயை சுற்றி நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.83 லட்சம் செலவில் கண்மாயை துார்வாரி சுற்றிலும் பேவர் பிளாக்கில் நடைபாதை அமைப்பதற்காக பூமி பூஜை தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம்,பொறியாளர் பட்டுராஜன்,நகராட்சி கவுன்சிலர் நாகஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement