வரும் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5ம் தேதி வரை, சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மையத்தின் அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, சோலையார், தேனி மாவட்டம் பெரியாறு பகுதிகளில் தலா 5 செ.மீ., கடலுார் மாவட்டம் விருத் தாசலத்தில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவை தவிர, சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலுார், திருவள்ளூர், தஞ்சாவூர், சேலம், சென்னை, புதுச்சேரியில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 5ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். அதேபோல, இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பெல்ஜியம் கார் பந்தயம்; அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடம் பிடித்து அசத்தல்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; டெம்போ மீது லாரி மோதியதில் பக்தர்கள் 3 பேர் பரிதாப பலி
-
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
-
இன்று அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர் ; குவாட் மாநாட்டில் பங்கேற்பு
-
திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் கைது
-
'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'