இடிந்து விழும் ஆயுதப்படை குடியிருப்பு அச்சத்தில் போலீஸ் குடும்பம்

சிவகங்கை : சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் மேற்கூரைகள் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் போலீசாரின் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் 24 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 12 வீடுகள் உள்ளது. இதில் தற்போது 70க்கும் மேற்பட்ட ஆயுதபடை போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இந்த குடியிருப்புகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த கட்டடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் மேற்கூரைகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. சில கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

அடிக்கடி கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால் சேதம் அடைந்துள்ள கட்டடத்தில் குடியிருக்க போலீசார் அச்சப்படுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் சேதம் அடைந்துள்ள குடியிருப்புகளுக்கு மாற்றாக புதியவீடுகள் கட்டித்தர வேண்டும்.

Advertisement