மாற்றுத்திறனாளி தம்பதி சப்-கலெக்டரிடம் மனு
கோபி, கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் சிவசண்முகம், 39, இவரது மனைவி நித்யா, 33; இருவரும் மாற்றுத்திறனாளிகள். மனைவியுடன் சேர்ந்து சிவசண்முகம், கோபி சப்-கலெக்டர் சிவானந்தத்திடம், நேற்று மனு வழங்கினார். மனு விபரம்:
இரு ஆண்டுக்கு முன் கனரா வங்கியில் கடன் பெற்று, பேட்டரியால் இயங்கும் பயணியர் ஆட்டோ வாங்கினேன். கொடிவேரி அணை பஸ் ஸ்டாப்பில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்கிறேன். அப்பகுதியை சேர்ந்த சிலர், பயணிகளை ஏற்றிச்செல்ல கூடாது என மிரட்டுகின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறேன். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். சப்-கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 ஆண்டுக்கு 800 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதி கேட்பு
-
வீடு உட்பட 2.83 கோடி நுகர்வோருக்கான கட்டண உயர்வை அரசே ஏற்கும்: அமைச்சர் வீடுகள் உள்ளிட்ட 2.83 கோடி நுகர்வோருக்கு இல்லை
-
கடல்வழி சுற்றுலா பயணியர் வருகை 10 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு
-
ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி; கமிஷனர்களுக்கு அரசு உத்தரவு
-
புதுச்சேரி பல்கலை.,யில் தெற்கு பிராந்திய மாநாடு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கல்வியாளர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement