அரசு கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் வகுப்பு துவக்க விழா

விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.
முதல்வர் சிவக்குமார் வரவேற்று பேசியதாவது; கல்லுாரியில் இக்கல்வியாண்டு சேர்க்கையை பெற 70 ஆயிரத்து 50 விண்ணப்பங்கள் வந்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் இரு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்கல்லுாரி, இந்தியாவில் உள்ள 46 ஆயிரம் கல்லுாரிகளில் 201வது இடத்தை பெற்றுள்ளது.
இங்குள்ள பேராசிரியர்கள் உங்களுக்கு சிறப்பான பாடங்களை கற்பிப்பதோடு, ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுத்தருவர். இக்கல்லுாரியில் பயிலும் நீங்கள், படிப்பு முடித்து வெளியே செல்லும் போது நல்ல பணிகளில் சேர்ந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கூறினார். துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபாச நடனமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
-
'நபார்டு' பயிர் கடனை உயர்த்தி வழங்க அமித் ஷாவிடம் பெரியகருப்பன் வலியுறுத்தல்
-
மக்காச்சோளம் சாகுபடிக்கு வழிகாட்டுதல்... தேவை; வேளாண்மைத்துறை கவனம் செலுத்துமா?
-
வாய் கோமாரி தடுப்பூசி முகாம் நாளை... துவக்கம்; 3 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்த இலக்கு
-
விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு; அமெரிக்கா உறுதி
-
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு!
Advertisement
Advertisement