'இ.பி.எப்.ஓ., ஓய்வூதியம் பெற புதிய படிவம் தேவையில்லை'; வதந்தி குறித்து மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், ஓய்வூதியம் பெறுவோர் புதிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது கட்டாயம் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது; அடிப்படை ஆதாரமற்றது என பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கம் அளித்துள்ளது.


வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இ.பி.எப்.ஓ., அமைப்பு, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், புதிய ஓய்வூதிய படிவத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும்; அதை சமர்ப்பிக்காவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து, படிவத்தை தரவு இறக்கம் செய்வதற்கான இணைப்புடன் கூடிய தகவல் வெளியாகி பரவியது.


இது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்டுத்திய நிலையில், அரசு விளக்கமளித்துள்ளது.

Advertisement