ஆர்ப்பாட்டம்

இளையான்குடி,:
திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உரிய நீதி வழங்க கோரி இளையான்குடி ஒன்றிய நாம் தமிழர் கட்சி இளைஞர் மற்றும் மாணவர் பாசறை சார்பில் ஆர்ப்பாட்டம் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தலைமையில் நடந்தது.

மாநில கூட்டமைப்பு பொறுப்பாளர் தங்கராசு முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பேசினர்.

Advertisement