பெண் மீது தாக்குதல் வாலிபர் கைது
விழுப்புரம், : விழுப்புரம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வளவனுாரை சேர்ந்தவர் பாஸ்கர், 25; இவருக்கு, 23 வயது பெண்ணுடன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதி தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் அடுத்த தளவானுாரை சேர்ந்த பாலசுந்தரமூர்த்தி மகன் ஸ்டாலின்,27; என்பவருக்கு கடந்தாண்டு, பாஸ்கரின் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த இருவரையும், பாஸ்கரின் தாயார் செல்வி, 44; கண்டித்தார்.
இதையடுத்து கடந்த 28ம் தேதி இரவு, ஸ்டாலின் வளவனூரில் வீட்டிற்கு நடந்து சென்ற செல்வியை வழி மறித்து, திட்டி சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து செல்வி புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்
-
ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!
-
அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு
-
அதிக கார்பன் இருப்பு நமக்கு பெருமை: சொல்கிறார் அருணாச்சல் முதல்வர்
-
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை
Advertisement
Advertisement