சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஏட்டு 'சஸ்பெண்ட்'

கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் சட்டம், ஒழுங்கு போலீஸ் நிலைய ஏட்டு பாலமுருகன், 40; இவருக்கும், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சரண்யா, 34; என்பவருக்கும் ஏற்கனவே அறிமுகம் உள்ளது.

கடந்த 24ம் தேதி கடலுாருக்கு சென்ற பாலமுருகன், வீட்டிற்கு அருகே நின்றிருந்த சப்இன்ஸ்பெக்டர் சரண்யாவை திட்டி தாக்கினார்.இது குறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, பாலமுருகனை கைது செய்தனர். இதையடுத்து, ஏட்டு பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து, கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டார்.

Advertisement