நடிகருக்கு 'போதை' சப்ளை செய்தவரின் கூட்டாளி கைது

சென்னை : நடிகர் கிருஷ்ணாவிற்கு போதை பொருட்கள் வினியோகம் செய்தவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.
அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், கடந்த 30ம் தேதி 'வல்லவன்' ஹோட்டல் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப் பொருள் வைத்திருந்த அந்தோணி ரூபன், 29, தீபக்ராஜ், 25, ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து,14.20 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள், இரண்டு பைக், இரண்டு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் வழக்கில் தலைமறைவாக இருந்த விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இமமானுவேல் ரோஹன், 23, என்பவரை, தேடி வந்தனர். நேற்று அவரை கைது செய்த போலீசார், 2.50 கிராம் மெத் ஆம்பெட்டமைன், மொபைல்போனை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், இவர் நடிகர் கிருஷ்ணாவிற்கு போதை பொருட்கள் வினியோகம் செய்த கெவின் என்பவரின் கூட்டாளி என்பது தெரிய வந்தது.
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு; கோவை, நீலகிரிக்கு மஞ்சள் அலர்ட்
-
மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வைத்திருந்த 200 சவரன் நகை: வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல்
-
புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் ; பீகாரில் மேலும் ஒரு திடுக்
-
அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகி விடும்: மார்க்சிஸ்ட் கணிப்பு
-
கேரளாவில் அரசு பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: கடைகளுக்குள் புகுந்து சேதம்
-
போதைப்பொருள் கும்பல் தலைவன் கேரளாவில் கைது