தொடர்ந்து உயரும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 அதிகரிப்பு

3


சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய முன்தினம் சவரன் ரூ.840 அதிகரித்து, ரூ.72160 ஆக விற்பனையானது. நேற்று (ஜூலை 02) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9065க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூலை 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,105க்கு விற்பனை ஆகிறது.



கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 அதிகரித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement