தென்காசியில் அடுத்தடுத்து கைவரிசை

தென்காசி; ஆலங்குளம் அருகே ஆசிரியர் வீட்டில், 25 சவரன் நகைகள், 25,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம், பரும்பு பகுதியை சேர்ந்தவர் யோவான் மகன் திலீப்குமார், 32; குடும்பத்துடன் ஈரோட்டில் வசிக்கிறார்.

யோவான் வீட்டின் அருகே திலீப்குமாருக்கு தனி வீடு உள்ளது. யோவான், திலீப்குமார் வீட்டை சுத்தம் செய்வதற்காக நேற்று சென்றபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

கடையம் போலீசார் ஆய்வு செய்ததில், மர்ம நபர்கள், மாடி வழியாக வீட்டுக்குள் இறங்கி பீரோவில் இருந்த, 25 சவரன் நகைகள், 25,000 ரூபாயை கொள்ளையடித்தது தெரிந்தது.

சில நாட்களுக்கு முன், ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணம் பள்ளி உரிமையாளர் வீட்டிலும்,

இதேபோல், மாடி வழியாக வீட்டிற்குள் இறங்கி, 100 கிலோ நகை, 50 லட்சம் ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்தது. இரண்டு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement