பள்ளி மாணவி கர்ப்பம்; கலெக்டரிடம் புகார்
மதுரை; மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 16 வயது மகள் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். கணவர் பிரிந்து சென்ற நிலையில் தாயும், மகளும் வசித்து வந்தனர். இந்நிலையில் மாணவி கர்ப்பமுற்றார். விசாரணையில் பள்ளிக்கு பஸ்சில் செல்கையில் ஒருவர் பழக்கமாகி காதலித்தது தெரிந்தது. அவரது முகவரி தெரியாத நிலையில், அலைபேசியும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.
ஆறுமாத கர்ப்பிணியான அம்மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதையறிந்த மாவட்ட சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் முத்துக்குமார், மாணவியை கலெக்டர் பிரவீன்குமாரிடம் அழைத்து வந்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு தலைவர் பிரேமா தலைமையில் விசாரணை நடக்கிறது. மருத்துவ பரிசோதனைக்கு பின் அரசு காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் போலீஸ் பைக்கில் இருந்து குதித்து தப்பியோட்டம்
-
மனைவி, மகளை தவறாக பேசியதால் ஊராட்சி செயலர் வெட்டி கொலை நண்பர் அதிரடி கைது;
-
அரசு மருத்துவமனைக்குள் இரு தரப்பு மோதல் உளுந்துார்பேட்டையில் பரபரப்பு
-
வீரபாண்டியில் ஜெ., பேரவை திண்ணை பிரச்சாரம்
-
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பேரணி
-
விவேக் அகாடமி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
Advertisement
Advertisement