வக்கீல் சங்க தலைவருக்கு வாட்ஸ்ஆப் காலில் மிரட்டல்
கரூர், கரூரில், வக்கீல் சங்க தலைவரை வாட்ஸ் ஆப் கால் மூலம் மிரட்டிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை சுங்க கேட் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வக்கீல் மாரப்பன், 58. இவர் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு தலைவராகவும் உள்ளார்.
கடந்த, 2ம் தேதி மாரப்பனின் மொபைல் போன் வாட்ஸ் ஆப் காலில், தொடர்பு கொண்டு பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, வக்கீல் மாரப்பன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாட்ஸ் ஆப் காலில் மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரில் தொழிலதிபர் கெம்கா வீடு முன்பு சுட்டுக்கொலை!
-
இரவு பகல் பாராமல் 'லேப்டாப்' பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு: டாக்டர் காமராஜ் எச்சரிக்கை
-
ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
Advertisement
Advertisement