இளம்பெண்கள் மாயம் போலீசில் தாய் புகார்

பவானி, சித்தோடு அருகே ராயபாளையத்தை சேர்ந்தவர் விஜயா, 53; இவரது மகள் மகாலட்சுமி, 20; ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசில் புகாரளித்துள்ளார்.

* சித்தோடு அருகே கரைஎல்லபாளையத்தை சேர்ந்தவர் செல்வி, 45; இவரின் மகள் பிரீத்தி, 25; நேற்று முன்தினம் காலை செல்வி வேலைக்கு சென்றபோது, பிரீத்தி வீட்டில் இருந்தார். மதியம் வீட்டுக்கு வந்தபோது மகளை காணவில்லை. செல்வி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement