புல்வெளி கால்பந்து மைதானம் திறப்பு

பழநி: பழநி அக் ஷயா சி.பி.எஸ்.சி., பள்ளியில் 10,500 சதுர அடியில் புதிதாக புல்வெளி கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டது.

மாணவர்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்க உதவும் வகையில் அமைக்கப்பட்ட மைதானத்தை டி.எஸ்.பி., தனஞ்செயன் திறந்து வைத்தார்.

இன்ஸ்பெக்டர் மணிமாறன் துவங்கி வைத்தார். பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், முதல்வர் செல்வி கலந்து கொண்டனர்.

Advertisement