உலக போலீஸ் விளையாட்டு போட்டி; பதக்கம் குவித்த இந்திய வீராங்கனை

3

பர்மிங்காம்: அமெரிக்காவில் நடந்த உலகளாவிய போலீசாருக்கான விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை சப்னா குமாரி 3 பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளார்.

அமெரிக்காவின் பர்மிங்காமில் (அலபாமா) நடைபெற்ற 21வது உலக காவல் விளையாட்டுப் போட்டியில், எல்லைப் பாதுகாப்புப் படையின் துணிச்சலான வீராங்கனை சப்னா குமாரி அபார திறமையால் வில்வித்தை மற்றும் 3 டி வில்வித்தை உள்பட 3 பிரிவுகளில் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சப்னா குமாரி . இவர் ஹரியானாவில் உள்ள எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார், அராவின் ரக்சி கார்டன் நவாடாவில் வசித்து வருகிறார். அவரது தந்தை ஜிதேந்திர பிரசாத், ஒரு டிராக்டர் மெக்கானிக் மற்றும் அவரது தாயார் குந்தி தேவி ஒரு ஆசிரியர்.

தந்தை ஒரு மெக்கானிக்



குழந்தை பருவத்திலிருந்தே, சப்னா தனது மூத்த சகோதரி நூதன் கும்ஹாரியுடன் தற்காப்புக் கலைகளைக் கற்க துவங்கினார். தொடர்ந்து அவர் பயிற்சியாளரான மூத்த வில்வித்தை வீராங்கனை முக்தி பதக்கிடமிருந்து வில்வித்தை கலையைக் கற்றுக்கொண்டார். சப்னாவின் தந்தை ஜிதேந்திர பிரசாத், தனது மகள்கள் விளையாட்டு மீது கொண்டிருந்த ஆர்வத்தைக் கண்டு அவருக்கு முழு உறுதுணையாக இருந்ததாக சப்னா தெரிவித்தார். சப்னாவின் கணவர் ரஜ்ஜன் குமாரும் ஒரு வில்வித்தை வீரர் ஆவார்,


@quote@சப்னா குமாரியின் சாதனையை மாநில அரசு மற்றும் விளையாட்டு துறையினர் பாராட்டி வருகின்றனர். quote

Advertisement