டாடா ஏஸ் வேனில் கடத்திய ரூ.1 லட்சம் இரும்பு பறிமுதல்
விருத்தாசலம் : கம்மாபுரம் அருகே என்.எல்.சி., இரும்பு கடத்தி வந்த டாடா ஏஸ் வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி தலைமையிலான போலீசார் சேத்தியாத்தோப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கத்தாழை கிராமத்தில் இருந்து வெளியே வந்த டாடா ஏஸ் வேனை நிறுத்தியபோது, டிரைவர் தப்பியோடினார்.
வேனை சோதனை செய்ததில், என்.எல்.சி., சுரங்கத்தில் பயன்படுத்திய பழைய இரும்பு பைப்புகள் உள்ளிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தளவாடப்பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து இரும்பு பொருட்களை பறிமுதல் செய்து, வேன் உரிமையாளர் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரிய நெற்குணம் ஞானசேகரன் மகன் மணிகண்டனை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
Advertisement
Advertisement