பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!

1


ரியோ டி ஜெனிரோ: பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.


கானா, டிரினிடாட் & டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக, பிரேசிலுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


அங்கு, ​​இந்திய புலம் பெயர்ந்தோர் ஆபரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாசார நடனத்தை நடத்தினர். அவர் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன்.


பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின் பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறேன். இந்த பயணத்தில் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும் இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement