டாப்செட்கோ, டாம்கோ திட்டத்தில் கூட்டுறவு வங்கியில் 'லோன் மேளா'

சென்னை:'டாப்செட்கோ, டாம்கோ' கடனுதவி திட்டங்களில், எட்டு இடங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், 'லோன் மேளா' முகாம்கள் நடக்கின்றன.


'டாப்செட்கோ' எனும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில், பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, 2025 - 26ம் ஆண்டில், 3 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


@twitter@https://x.com/dinamalarweb/status/1942054174902063122twitter
அதேபோல், 'டாம்கோ' எனும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டத்திலும், 1 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டங்களில் கடன் வழங்கும் வகையில், சென்னை மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், மாலை 4:00 மணிக்கு, 'லோன் மேளா' முகாம் நடக்கிறது. முகாம்களில் நேரடியாக அணுகி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement