சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர், பீர்பயில்வான் தர்கா பகுதியைச் சேர்ந்த அல்தாப்பின் மகன் நவ்பல், 17; பிளஸ் 2 மாணவர். கடந்த 2ம் தேதி டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டருகே தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், 'அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்' எனக்கோரி, அப்பகுதி மக்கள் மறியல், போராட்டம் நடத்தினர்.
மின்வாரியத்தின் அலட்சியம் குறித்து கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தினர்.
அதன்படி, மின்வாரியம் சார்பில் நிவாரணமாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், உயிரிழந்த மாணவர் நவ்பலின் தந்தை அல்தாபிடம் நேற்று வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement