துாயபாத்திமா அன்னை ஆலயத்தில் 52ம் ஆண்டு தேர்த்திருவிழா துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில், 52ம் ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடி-யேற்றத்துடன் துவங்கியது.
ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், பெங்களூரு புனித பேதுருபாப்பிறை குருத்துவ
கல்லுாரி பேராசிரியர் சகாயராஜ், திருவிழா கொடியை ஏற்-றினார். இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஆலயத்தில் பங்குதந்தை அருள்ராஜ் முன்னிலையில், நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, 9 நாட்கள் நடக்கும், இந்த தேர்த்திருவிழா நிறைவு-நாளின் போது, வாணவேடிக்கையுடன், பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது.

Advertisement