வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் அபிஷேக், 21; ஓசூர் தனியார் நிறுவன ஊழியர். நேற்று விடுமுறை என்பதால், நீச்சல் கற்க அதே பகு-தியில் சுப்பிரமணி என்பவரது கிணற்றுக்கு நண்பர் களுடன் சென்றார்.

நீச்சல் பழகியபோது நீரில் மூழ்கி பலியானார். ஓசூர் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்.* சூளகிரியில் தனியார் கிரானைட் நிறுவனம் அருகே, டாஸ்மாக் கடை இயங்குகிறது. இதன் அருகே கிணற்றில், 45 வயது மதிக்-கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்
என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement