மணகாளி மாரியம்மன் ஆனி விழா

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மணப்பட்டி மணகாளி மாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நடந்தது.

இக்கோயிலில் ஜூன் 30 ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கிய நிலையில் தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. ஜூலை 5ல் பெண்கள் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர்.

நேற்று காலை 10:00 மணிக்கு சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்தி செலுத்தினர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இன்று ஆடு பலியிட்டும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.

Advertisement