மருத்துவமனை கழிப்பறையில் மருத்துவ மாணவியின் சடலம்



கோவை: பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை கழிப்ப-றையில், மருத்துவ மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை பீளமேடு பகுதியில், தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு, நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூ-ரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில், 5ம் தேதி இரவு பணியில் இருந்தார்.
நேற்று காலை அவர், மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், பீளமேடு போலீ-சாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பவபூரணியின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement