குளித்தலை அரசு கலை கல்லுாரியில் இளநிலை பாடங்களுக்கு நேரடி சேர்க்கை

குளித்தலை: குளித்தலை அரசு கலை கல்லுாரியில், இளநிலை பாட பிரிவு-களுக்கான நேரடி சேர்க்கை நடக்கிறது என, கல்லுாரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
குளித்தலை அரசு கலை கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டிற்-கான இளநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை, மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், காலியாக உள்ள அனைத்து பாடப்பிரி-வுகளுக்கும் நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 2 முடித்து, இதுவரை கல்லுாரியில் சேராத மாணவர்கள் மற்றும் விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக கல்லுாரியில் செயல்பட்டு வரும் மாணவர் சேவை மையத்திற்கு வருகைபுரிந்து விண்ணப்-பித்து காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடியாக வந்து சேர்ந்து பயனடையலாம். மேலும், வெளியூர் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தனித்தனி இலவச விடுதி வசதியும் உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement