மின் உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தில், மின் வாரிய உதவி பொறி-யாளர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் திறப்பு விழாவிற்கு, எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராம-லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்-குமார், உதவி பொறியாளர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதேபோல், மோகனுார் தாலுகா, சந்திரகி-ரியில், புதிய மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை, எம்.பி., ராஜேஸ்குமார் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., ராம-லிங்கம், மோகனுார் அட்மா தலைவர் நவலடி ஆகியோர் முன்-னிலை வகித்தனர். தலைமை பொறியாளர் ராஜலட்சுமி, மேற்-பார்வை பொறியாளர் சபாநாயகம், மின் பொறியாளர்கள், பணியா-ளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement