தேங்காய் நாரில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்



பவானி: பவானி அருகே ஜம்பை, பெரியவடமலைபாளையத்தை சேர்ந்-தவர் கணபதி, 45; கருக்குபாளையம் பகுதியில் தேங்காய் நார் அரைக்கும் மில் வைத்துள்ளார். தேங்காய் மட்டைகளை மொத்த விலைக்கு வாங்கி வந்து அவற்றை அரைத்து உரமாகவும் விற்-கிறார்.

தேங்காயை உரித்த நார்களை திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்-தது. சிறிது நேரத்தில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கம்பத்தில் கம்பிகள் ஒன்றொடு ஒன்று உரசி-யதில் ஏற்பட்ட தீப்பொறி, தேங்காய் நாரில் விழுந்து தீப்பிடித்துள்-ளது. தீயில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார் சேத-மாகி விட்டதாக தெரிகிறது.

Advertisement