தங்கம் வென்றார் வித்யா * காமன்வெல்த் பில்லியர்ட்சில்...

பாலக்லாவா: மொரிசியசில் காமன்வெல்த் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் முதன் முறையாக நடந்தது. பெண்களுக்கான பைனலில் (8 பந்து பிரிவு) இந்தியாவின் வித்யா பிள்ளை, தென் ஆப்ரிக்காவின் மரினா ஜேக்கப்ஸ் மோதினர். துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட வித்யா, 5-1 என முன்னிலை பெற்றார்.
இதன் பின் திடீரென ஏமாற்றினார். இதனால் போட்டி 5-5 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் அவுட்' நடந்தது. இதில் அசத்திய வித்யா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார்.
மற்றொரு பைனலில் (10 பந்து) இந்தியாவின் சித்ரா மகிமைராஜ், சிங்கப்பூரின் வீனஸ் லிம் ஜின்யி மோதினர். இப்போட்டி 5-5 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் அவுட்டில்' சித்ரா 2-4 என தோல்வியடைந்து, வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான 6 பந்து பிரிவில் இந்தியாவின் அனுபமா, கீர்த்தனா அரையிறுதியில் தோல்வியடைந்து, வெண்கலம் பெற்றனர்.
ஆண்களுக்கான ஸ்னுாக்கர் காலிறுதியில் இந்தியாவின் அனுபவ வீரர் பங்கஜ் அத்வானி, 2-3 என அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மேலும்
-
புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை மூட மஹா., அரசு உத்தரவு
-
லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
-
செடியின் அடி முதல் நுனி வரை ஆராயும் ஏ.ஐ., தொழில்நுட்பம் மக்காச்சோளத்தில் நடக்குது முதல் ஆராய்ச்சி
-
புதிய ஆட்டோவில் பழுது: இழப்பீடு வழங்க உத்தரவு
-
டூரிஸ்ட் வேனுக்கு அபராதம் விதிப்பு
-
செடியின் அடி முதல் நுனி வரை ஆராயும் ஏ.ஐ., தொழில்நுட்பம்; மக்காச்சோளத்தில் நடக்குது முதல் ஆராய்ச்சி