டூரிஸ்ட் வேனுக்கு அபராதம் விதிப்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் டூரிஸ்ட் வேனில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை அழைத்து சென்ற டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவன வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆட்டோக்களில் அனுமதிக்ப்பட்ட மாணவர்களை விட அதிகமாக ஏற்றி செல்வதாகவும், மாணவர்களை டூரிஸ்ட் வேனில் அழைத்து செல்லப்படுவதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போக்குவரத்து துறை ஆர்.டி.ஓ. பிரபாகரன் ராவ் தலைமையில் ஆய்வாளர்கள் கடலூர் சாலையில், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்களை சோதனை செய்தனர். அதில் விதிமுறைகளை மீறி மாணவர்களை ஏற்றி வந்த டூரிஸ்ட் வேன் டிரைவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கிய டிரைவர்களுக்கும், சீருடை அணியாமல் வந்த டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாலாங்குளம் படகு இல்லத்துக்கு 'பூட்டு' அதிக கட்டண வசூல் ஆசைக்கு வேட்டு
-
விராட் கோலி-அனுஷ்கா புகைப்படங்கள் வைரல்: விம்பிள்டனில் ஜோகோவிச் ஆட்டத்தை ரசித்தனர்
-
தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த இடத்தில் சோகம்; கார் மீது சரக்கு வாகனம் மோதி 4 பேர் பலி!
-
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
Advertisement
Advertisement