பாலத்தில் தவறி விழுந்து ஓய்வு எஸ்.ஐ., உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி புதிய போலீஸ் குடியிருப்பில் வசித்தவர் கணேசன், 60; ஆயுதப்படை எஸ்.ஐ.,யாக பணியாற்றி, மே மாதம் ஓய்வு பெற்றார்.

நேற்று முன் தினம், கூமாபட்டியில் உள்ள அவரது தென்னந்தோப்புக்கு சென்றார். அங்கிருந்து புறப்பட்டு, பாட்டகுளம் நான்கு வழிச்சாலை வழியாக டூ-வீலரில் வந்தார். இரவு, 8:45 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் சர்வீஸ் ரோட்டில் இறங்கிய போது, மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement