பாலத்தில் தவறி விழுந்து ஓய்வு எஸ்.ஐ., உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி புதிய போலீஸ் குடியிருப்பில் வசித்தவர் கணேசன், 60; ஆயுதப்படை எஸ்.ஐ.,யாக பணியாற்றி, மே மாதம் ஓய்வு பெற்றார்.
நேற்று முன் தினம், கூமாபட்டியில் உள்ள அவரது தென்னந்தோப்புக்கு சென்றார். அங்கிருந்து புறப்பட்டு, பாட்டகுளம் நான்கு வழிச்சாலை வழியாக டூ-வீலரில் வந்தார். இரவு, 8:45 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் சர்வீஸ் ரோட்டில் இறங்கிய போது, மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
Advertisement
Advertisement