கட்டு விரியன் கடித்த சிறுவன் 10 நாள் சிகிச்சைக்கு பின் நலம்
ஈரோடு : அந்தியூர் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து, மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்ற சிறுவன் குணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பட்லுார், சொக்கநாத மணியூரை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் மகன் ஜெயசூர்ய குமார், 11; ஆறாம் வகுப்பு மாணவன். ஜூன் 26 இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, ஜெயசூர்யகுமாரை கட்டு விரியன் பாம்பு கடித்தது. அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சுய நினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனுக்கு, விஷ முறிவு மருந்து வழங்கி, இரு நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்தனர். பின், 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், முழுமையாக குணமடைந்து சிறுவன் வீடு திரும்பினார்.
அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா கூறுகையில், ''கட்டுவிரியன் பாம்பு கடித்தால், கடும் வயிற்று வலி ஏற்பட்டு, நரம்பு மண்டலம் பாதித்து உயிரிழப்பு ஏற்படும். பாம்பு கடித்தால், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டதால் குணமடைந்தார்,'' என்றார்.
மேலும்
-
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை