4ம் வட்டம் அளவிலான மாணவர் தின விழா போட்டிகள் துவக்கம்

புதுச்சேரி : காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி கல்வித்துறையின் 4ம் வட்டம் அளவிலான மாணவர் தினவிழா போட்டிகள் வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலர் குலசேகரன், பெண்கல்வி இணை இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 4ம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் திருவரசன் வரவேற்றார்.
இதில்,அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தில் உரிய உச்சரிப்புடன் பிழையின்றி படித்தல், பிழையின்றி எழுதுதல் மற்றும் பொது அறிவு வினாடி -வினா போட்டிகளில் கலந்து கொண்டனர்.
கோர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் முரளி, 5ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன், வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குணச்செல்வி, ஓவிய ஆசிரியர் வேலாயுதம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். உடற்கல்வி ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை 4ம் வட்ட அலுவலக ஆசிரியர்கள் முரளிதரன், ஏழுமலை மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வித்துறை மூலம் மாணவர் தினத்தன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.
மேலும்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு