விண்வெளிக்கு அனுப்பிய 166 பேரின் அஸ்தி கடலில் மூழ்கியது
ஹூஸ்டன்: விண்வெளிக்கு 166 பேரின் அஸ்தி மற்றும் டி.என்.ஏ., மாதிரிகளுடன் சென்ற விண்கலம் பூமிக்கு திரும்பும்போது பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த, செலஸ்டிஸ் என்ற விண்வெளி நிறுவனம், புதிய வகை சேவையை வழங்கி வருகிறது. உயிரிழந்தவர்கள் விண்வெளியில் பயணித்தது போன்ற ஒரு நினைவை உண்டாக்கும் வகையில், இறந்தவர்களின் அஸ்தியை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.
இந்த நிறுவனமும், ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த 'தி எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் - 9 ராக்கெட் வாயிலாக, 166 பேரின் அஸ்தி மற்றும் டி.என்.ஏ., மாதிரிகளை அனுப்பின.
இந்த விண்கலம், கடந்த மாதம், 23ல் விண்வெளிக்கு ஏவப்பட்டது. திரும்பும் வழியில் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாகவும், அதை மீட்க முடியவில்லை என்றும் செலஸ்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு