விராட் கோலி-அனுஷ்கா புகைப்படங்கள் வைரல்: விம்பிள்டனில் ஜோகோவிச் ஆட்டத்தை ரசித்தனர்

லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட்
வீரர் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா நேரில் கண்டுகளித்தனர்.
இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
விம்பிள்டன் டென்னிஸ்
டென்னிஸ் விளையாட்டின் முக்கிய
தொடராக பார்க்கப்படும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர், லண்டனில்
நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின்
ஜோகோவிச் 1-6, 6-4, 6-4, 6-4 என, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை
வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை
முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் நேரில் கண்டுகளித்தார். போட்டி
நடைபெற்றபோது ஜோகோவிச் பெறும் ஒவ்வொரு புள்ளிக்கும் அடிக்கடி ரோஜர்
பெடரரை கேமராவில் காண்பித்தனர்.
அதேபோல், இந்திய நட்சத்திர
கிரிக்கெட் வீரரான விராட் கோலியும், அவரது மனைவி மற்றும் பாலிவுட்
நடிகையான அனுஷ்கா சர்மாவும் ஜோகோவிச் ஆட்டத்தை பார்வையாளர் பகுதியில்
இருந்து நேரில் கண்டுகளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில்
வைரலாகி வருகிறது.
@block_P@அதுகுறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்த விராட் கோலிக்கு, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார். block_P
இவர்கள் இதற்கு முன்பு 2015ல் நடந்த விம்பிள்டன் போட்டியையும் நேரில்
பார்த்துள்ளனர்.
மேலும்
-
உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்: டில்லிக்கு 9வது இடம்
-
வன மஹோத்சவம் - காவேரி கூக்குரல் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மரம் நடும் விழாக்கள்
-
முற்றியது தந்தை - மகன் மோதல்; அன்புமணிக்கு எதிராக பா.ம.க., செயற்குழுவில் தீர்மானம்
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல்
-
அ.தி.மு.க.,வை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது; இ.பி.எஸ்.,
-
திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.11.8 கோடி!