திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.11.8 கோடி!

திருச்சி: பாங்காக்கில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 11.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 11.8 கிலோ உயர் ரக கஞ்சா, திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக, விமானத்தில் நேற்று திருச்சி விமான நிலையம் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற பயணியை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.
அந்நபர், 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்சாவை, சீல் செய்யப்பட்ட பைகளில் எடுத்து வந்தது தெரியவந்தது. கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்நபரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
அண்மைக் காலமாக திருச்சி விமான நிலையம் வழியாக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வருவது அதிகரித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சாவின் மதிப்பு ரூ.11.8 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





மேலும்
-
275 பேர் மரணத்திற்கு காரணமான ஏர் இந்தியா விபத்து: முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
-
மண், மழை, மக்கள்-- =கோவா மண் திருவிழா
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம்!
-
தமிழகத்தை படுபாதாளத்துக்கு தள்ளியது தான் ஸ்டாலின் மாடல் சாதனை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால்...: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
-
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்