சீனா-நேபாள எல்லையில் மண் சரிவு: 17 பேர் மாயம்

பீஜிங்: சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 17 மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சீனா-நேபாள எல்லைப் பகுதியில் கைரோங் என்ற நகரம் உள்ளது. கைரோங் என்ற பகுதி தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியாகும். இங்கு இன்று அதிகாலையில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் 17 பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டடுள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் கூறியதாவது:
இன்று அதிகாலையில் கைரோங் நகரில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 17 பேரை காணவில்லை. இந்த சம்பவத்தில் சீனாவை சேர்ந்த 11 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த 6 கட்டுமானத் தொழிலாளர்களும் மாயமாகி உள்ளனர். காணாமல் போனவர்கள் சேற்றில் சிக்கி இருக்கலாம். ஆகவே அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பு வரவேற்பு
-
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 18 பேர் பலி
-
கூட்டு பாலியல் வன்கொடுமை: கால் இழந்தார் பாதிக்கப்பட்ட பெண்
-
ஏமன் சிறையில் கேரள நர்சுக்கு மரண தண்டனை: தேதி அறிவித்ததால் அதிர்ச்சி; காப்பாற்ற இறுதி கட்ட முயற்சி
-
ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டம் விதிகளுக்கு முரணானது: அன்புமணி போட்டி தீர்மானம்
Advertisement
Advertisement