மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது

ஊட்டி:மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி தம்பதிக்கு இரண்டு மகள், இரண்டு மகன்களுடன் வசித்தனர். 17 வயதான மூத்த மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மூத்த மகள் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். பின், உறவினர்கள் உதவியுடன் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement