செக்யூரிட்டியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
விழுப்புரம் : வளவனுார் அருகே செக்யூரிட்டியை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் அருகே வி.பதுார் காலனியை சேர்ந்தவர் விஜயரங்கன் மகன் விஜய்சங்கர்,28; இவர் அதே கிராமத்தில் உள்ள மனை பிரிவு ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.
கடந்த 6ம் தேதி இரவு 10:30 மணிக்கு, அதே ஊரை சேர்ந்த ஏகாம்பரம் மகன் அசோக்(எ) ரகோத்தமன்,33; மோகன்ராஜ் மகன் நெப்போலியன்(எ)ராஜூ,28; ஆகியோர் விஜய்சங்கரிடம், அவரது முதலாளியிடம் மனை பிரிவு கமிஷன் கேட்டு வாங்கித்தர வலியுறுத்தி, கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த விளம்பரப் பலகையை உடைத்து சேதப்படுத்தி தாக்கியுள்ளனர். வளவனுா போலீசார் வழக்குப் பதிந்து ராகோத்தமன், ராஜூவை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழிற்சங்கத்தினர் அறிவித்த பாரத் பந்த்: கேரளா, மேற்கு வங்கத்தில் பாதிப்பு; மற்ற மாநிலங்களில் பாதிப்பில்லை
-
அச்சு முறிந்ததால் விபரீதம் சுவாமியுடன் சாய்ந்தது தேர்
-
குஜராத்தில் பாலம் இடிந்ததில் 9 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்
-
விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்: அர்ஜூன் சம்பத்
-
பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு
-
‛‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
Advertisement
Advertisement